Pages

Sunday, November 4, 2012

முயலை வென்ற ஆமை

அது ஒரு அடர்ந்த காடு. சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளும் மான், முயல், காட்டுக்குதிரை, வரிக்குதிரை போன்ற அமைதியான விலங்குளும் தங்களுக்கென எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழும் அளவுக்கு மிகப்பெரிய காடு.

அந்த காட்டில் சுமார் 150 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஆமை ஒன்று தனது பேரக்குழந்தைகளை காண காட்டின் மறுபகுதிக்கு சென்றிருண்டது. குழந்தைகளுடன் அன்றைய நாளை அமைதியை செலவிட்ட ஆமை மாலை வந்ததும் தனது இருப்பிடத்தை நோக்கி புறப்பட்டது.

ஆமை மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் இருந்தது.

வானம் மிகவும் கருத்து மேகக்கூட்டங்கள் அந்த காட்டின் மீது படர்ந்தன. அதை கண்ட காட்டு விலங்குகளும் பறவைகளும் தங்கள் வேலைகளை சீக்கிரம் முடித்துக்கொண்டு தங்கள் வீடுகளை நோக்கி வேகமாக திரும்பின. பல விழங்குகள் தங்கள் பிள்ளைகளையும், உணவுப்பொருட்களையும் பதிரப்படுதுவதில் முனைப்புடன் ஈடுபட்டன.


அப்போது அந்த ஆமை நடந்து சென்ற வழியாக ஒரு இளம் முயல் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தது.

அந்த முயல் ஓடிவரும் வழியில் ஆமை மிகவும் மெதுவாக நடந்து வருவதை கண்டது. அதைக்கண்டதும் அந்த இளம் முயல் ஆமையை பார்த்து "ஏ சோம்பேறி ஆமையே வேகமாக ஓடு. இல்லையென்றால் மழையில் நனைந்து விடுவாய்" என்று சொன்னது.

அதை கேட்ட ஆமை "தம்பி ! உன் எச்சரிக்கைக்கு நன்றி, அனால் என்னால் உன்னைமாதிரி ஓட முடியாது, நான் மெதுவாகத்தான் வருவேன்" என்றது.

முயல் "என்ன ? உன்னால் ஓட முடியாதா? அப்பறம் எதற்கு நீயெல்லாம் இந்த உலகத்தில் வாழ்கிறாய்?" என்று ஏளனமாய் சிரித்தது.

இதை கேட்டு சற்றும் கொபமடையாத ஆமை "தம்பி ! உனக்கு என்ன வயது ஆகிறது? " என்று கேட்டது. அதற்கு அந்த முயல் "நான் மிகவும் பெரியவன். நான் பிறந்து 15 மாதங்கள் ஆகின்றன" என்று பதில் கூறியது.

"தம்பி ! நான் இந்த பூமிக்கு வந்து 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நான் இதே மெதுவான நடையுடந்தன் இந்த 150 ஆண்டுகளையும் கடத்து வந்துள்ளேன். அதனால் என்னை பற்றி ஏளனமாய் பேசாதே. எனக்கு வேகம் இல்லாமல் இருக்கலாம். அனால் நிறைய விவேகம் உள்ளது. " என்று எடுத்து கூறியது.


"விவேகத்தை வைத்து என்ன செய்வாய்? இப்போது மழையில் மாட்டிக்கொள்ளாமல் உன்னால் வீடு பொய் சேர முடியுமா? "என்றது.

"முடியும் தம்பி ! என்னால் முடியும்" என்று சற்றே புன்சிரிப்புடன் சொன்னது ஆமை.

"எங்கே பார்க்கலாம். நம் இருவருக்கும் ஒரு போட்டி. யார் இந்த காட்டின் மறுமுனையை முதலில் அடைகிறார்கள் என்று. போட்டிக்கு தயாரா?" என்றது முயல்.

"சரி தம்பி ! உன் விருப்பம் ! " என்ற ஆமை அதே வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.

முயல் முன்னைவிடவும் மிகவும் வேகமாக ஓடியது. தன்னால் இயன்ற வேகத்தை விடவும் மிகவும் வேகமாக ஓடியதால் ஏற்பட்ட பெருமூச்சையும் பொருட்படுத்தாமல் அது ஓடிக்கொண்டிருண்டது.










No comments:

Post a Comment